david miller [file image]
உலகக்கோப்பை 2024 டி20 : இறுதிப்போட்டியில் இந்திய அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியநிலையில் , இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள்.
அந்த வகையில், இதயத்தை உடைக்கும் தோல்விக்குப் பிறகு, டேவிட் மில்லர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. டேவிட் மில்லருக்கு வயது 35 பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கிறார் எனவே, அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்த தகவல் உண்மை என பலரும் நினைத்தார்கள்.
இந்த நிலையில், ஓய்வு பெறவில்லை என டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் இது பற்றி கூறியதாவது ” நான் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெறுவதாக அறிக்கைகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், நான் ஓய்வு அறிவிக்கவில்லை. இன்னும் தொடர்ந்து எங்களுடைய தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடுவேன். என்கிட்ட இருந்து இனிமேல் தான் சிறந்த ஆட்டம் வரப்போகிறது” எனவும் கூறியுள்ளார்.
ஓய்வு பெறவில்லை என மில்லர் விளக்கம் கொடுத்த நிலையில், ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுங்கள் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், டேவிட் மில்லர் இதுவரை 125 டி20 போட்டிகளில் விளையாடி 2,439 ரன்கள் எடுத்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 106 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…