DC RainbowJersey [Image- Twitter/@DelhiCapitals]
ஐபிஎல் 2023 தொடரின் சென்னை அணிக்கு எதிராக ரெயின்போ நிற ஜெர்சியுடன் விளையாடவுள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் அறிவிப்பு.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்து பிளேஆப் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இன்னும் மூன்று அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடிக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை குஜராத் அணி மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 10 அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டியே மீதமுள்ள நிலையில் வரும் 21ஆம் தேதியோடு லீக் சுற்றுப்போட்டிகள் நிறைவடைகின்றன.
இந்நிலையில் டெல்லி அணி நாளை சென்னை அணியுடன் தனது கடைசி லீக் ஆட்டத்தை டெல்லியிலுள்ள அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் டெல்லி அணி வானவில் நிற ஜெர்சியுடன் விளையாடப் போவதாக அறிவித்துள்ளது. இதனை டெல்லி கேபிட்டல்ஸ் அணி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
பெங்களூரு, குஜராத், லக்னோ அணிகளுக்கு பிறகு ஐபிஎல் 2023 இல் சிறப்பு ஜெர்சியுடன் விளையாடும் நான்காவது அணி டெல்லி ஆகும். டெல்லி அணி எதற்காக வானவில் நிற ஜெர்சியுடன் விளையாடப்போகிறோம் என அதிகாரபூர்வமாக வெளியிடாவிட்டாலும், ரசிகர்கள் இது ஓரின சேர்க்கையாளர்கள் (LGBT) சமூகத்திற்கான விழிப்புணர்வாக இருக்கலாம் என்று கூறிவருகிறார்கள்.</p
>
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…