ஹைதராபாத்தை வீழ்த்தி முதலிடத்திற்கு சென்ற டெல்லி அணி..!

Published by
murugan

டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களான அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் களமிறங்கினர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை இதனால், ஹைதராபாத் அணி20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணியில் ரபாடா 3, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் களமிறங்க வந்த வேகத்தில் பிரித்வி ஷா 11 ரன்னில் நடையை கட்ட பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த தவான் அப்துல் சமத்திடம் கேட்சை கொடுத்து 42 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து இறங்கிய பண்ட் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் பண்ட் 35*, ஸ்ரேயாஸ் ஐயர் 47* ரன்கள் எடுத்து நின்றனர். இதனால், டெல்லி அணி புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு சென்றுள்ளது.

Published by
murugan

Recent Posts

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

6 minutes ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

19 hours ago