Dhoni Visit - RCB Dressing Room [File Image]
சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.
சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, சென்னை அணிப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனி, பேட்டிங் மற்றும் கீப்பிங்கையும் தாண்டி, பவுலிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதால், நாளைய போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது.
இதனிடையே, இப்போட்டிக்காக நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி, திடீரென பெங்களூரு அணியின் டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஆர்சிபி வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் டீ குடித்து உரையாடிய அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாளை நடைபெறவுள்ள போட்டியில், பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலோ அல்லது மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டாலோ, சிஎஸ்கே அணி 4 ஆவது அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரம், 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் ஆர்சிபி அணி இலக்கை அடைந்தால் சென்னை அணியை விட ரன் ரேட்டில் முன்னேறி 14 புள்ளிகளுடன் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக முன்னேறும்.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…