natarajan and dinesh karthik [Image source : file image]
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம் பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார். இந்த மைதானத்தை திறக்கும் திறப்பு விழா வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த திறப்பு விழாவிற்கு தினேஷ் கார்த்திக், அசோக் சிக்மானி, ஷ. ஆர்.ஆர். பழனி, கே.எஸ். விஸ்வநாதன், ஆர்.எஸ். ராமசாமி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ளும் தினேஷ் கார்த்திக் மற்றும் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி இருவரும் தான் இந்த மைதானத்தை திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், நடராஜன் கட்டியுள்ள இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம்,கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் பார்க்க கூடிய வகையில், இடமும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…