#T20WorldCup: இலங்கையை வீழ்த்தி முதலிடத்தை தக்க வைத்த இங்கிலாந்து..!

Published by
murugan

இலங்கை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 137 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து, இலங்கை மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக ஜேசன் ராய்,  பட்லர் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜேசன் ராய் 9 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த மாலன் 6 , ஜானி பேர்ஸ்டோவ் டக் அவுட்டாக பின்னர் மோர்கன், பட்லர் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக அணி எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதிலும் அதிரடியாக விளையாடி வந்த பட்லர் சதம் விளாசி கடைசி வரை களத்தில் நின்றார் அதில் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடங்கும். அதேநேரத்தில் மோர்கன் கடைசி வரை 40 ரன்களுடன் களத்தில் நின்றார் இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியில் வனிந்தோ ஹசரங்க 3 விக்கெட்டை பறித்தார்.

164 ரன்கள் இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர் பாத்தும் நிஸ்ஸங்க 1 ரன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களம் கண்ட சரித் அசலங்க நிதானமாக விளையாடி 21 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில்  குசல் பெரேரா 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பிறகு ராஜபக்ச தலா 2 சிக்ஸர் , பவுண்டரி அடித்து 26 ரன் எடுத்தார். அடுத்து ஜோடி சேர்ந்த  தசுன் ஷனக, ஹசரங்க கூட்டணியில் 53 ரன்கள் சேர்ந்தது.

இதையெடுத்து தசுன் ஷனக 26, ஹசரங்க 34 ரன் எடுத்து அடுத்தது ஓவரில் விக்கெட்டை இழக்க இறுதியாக இலங்கை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட்டை இழந்து 137 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியில் ஜோர்டான், அதில் ரஷீத், மெயின் அலி  தலா 2 , கிறிஸ் வோக்ஸ், லிவிங்ஸ்டோன் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து அணி விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி விளையாடிய 4 போட்டிகளில் மூன்று போட்டிகள் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது.

Published by
murugan

Recent Posts

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

33 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

1 hour ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

2 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago