ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் இலக்காக இருந்தது. தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது.
இதைத்தொடர்ந்து நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இந்நிலையில் இங்கிலாந்து அணி இதற்கு முன் 1928-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 332 ரன்களை சேசிங் செய்தது அதுவே அதிகபட்ச ரன்களாக இருந்தது.
ஆனால் தற்போது சேசிங்கில் அந்த சாதனையை முறியடித்து அதிகபட்சமாக 386 ரன்களை வைத்து உள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…