ஃபகார் ஜமானின் அதிரடியான சதம்! பாகிஸ்தான் – நியூசிலாந்து போட்டி பாதியில் நிறுத்தம்!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகக்கோப்பை தொடரில் 35ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சிக்ஸர் மழை மொழிந்தனர்.

இதனால் இறுதியாக 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை நியூசிலாந்து அணி குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரன் 108 ரன்கள், கேன் வில்லியம்சன் 95 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 41 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்துலயே அப்துல்லா ஷபீக் விக்கெட்டை விட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களத்தில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.

NZvPAK : நியூசிலாந்தின் அதிரடி… பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் வெற்றி இலக்கு!

அதன்படி, அதிரடியாக விளையாடிய ஃபகார் ஜமான் 63 பந்துகளில் சதம் அடித்து நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களை மிரட்டினார். கேப்டன் பாபர் அசாமும் சிறப்பாக விளையாடி வந்தார். இந்த சமயத்தில் பெங்களுருவில் மழை குறிக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 21.3 ஓவரில் 160 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஃபகார் ஜமான் 106, கேப்டன் பாபர் அசாம் 47 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 242 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த சூழலில், போட்டி மழையால் நடைபெறவில்லை என்றால் பாகிஸ்தான் அணி வெற்றி பெரும் என கூறப்படுகிறது. ஏனென்றால், பாகிஸ்தான் DLS படி, நியூசிலாந்து அணியைவிட 10 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனால், மழையால் போட்டி ரத்தானால் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாவே அமையும் என்று கூறுகின்றனர். இருப்பினும், மழை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

6 minutes ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

3 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

3 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

4 hours ago