IPL 2024 : சேப்பாக்கத்தில் இறுதி போட்டி ..? மாலை வெளியாகிறது முழு அட்டவணை ..!

Published by
அகில் R

IPL2024 : கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் மார்ச்-22 அன்று தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியாகும் போதே பலவித சர்ச்சைகளுடன் தான் வெளியானது. இந்த ஆண்டில் இந்தியா நாட்டில் நடைபெற இருக்கும் இந்த நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் வெளியுடுவோம் என பிசிசிஐ தரப்பில் முதலில் கூறி இருந்தனர்.

அதன் பிறகு, பிசிசிஐ அறிவித்தது போல ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் முதலில் வெளியிட்டது. அந்த அட்டவணையில் ஐபிஎல் போட்டிகள் மார்ச்-22 முதல், ஏப்ரல்-7 ம் தேதி வரை நடைபெறும் எனவும், இடைப்பட்ட நாட்களில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. மீதம் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ, நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகு அறிவிக்கும் என தெரிவித்திருந்தது.

தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடுவதாக X தளத்தில் ஸ்டார்  ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், நடைபெற போகும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ முன்கூட்டியே அறிவித்தது. இந்நிலையில், வெளியாக போகும் இந்த ஐபிஎல் தொடரின் குவாலிபயர் -1 போட்டியும், எலிமினேட்டர் போட்டியும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும்.

குவாலிபயர்-2 மற்றும் இறுதி போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனவும் தெரிய வந்திருக்கிறது. அதிலும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியை சென்னை அணியின் போட்டியோடு தொடங்கியது போல, இரண்டாம் பாதியையும் சென்னை அணியின் போட்டியோடு தொடங்குகிறது எனவும் தெரிகிறது. இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கும் எனவும் அன்றைய போட்டியாக இரவு 8 மணி ஆட்டத்தில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது எனவும் தெரிய வந்துருகிறது.

Published by
அகில் R

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

4 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

5 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

5 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

5 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

6 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

7 hours ago