நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி:கோலிக்கு ஓய்வு – கேப்டன் யார் தெரியுமா?

Published by
Edison

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி இடத்தை இழந்த பிறகு,இந்திய அணியானது நியூசிலாந்துடன் மூன்று டி20 போட்டிகளிலும் நவம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது.இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதியும்,இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்றும்,இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலியே கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் துணை கேப்டன் புஜாரா,ராகுல் ,மயங்க்,கில்,ஸ்ரேயாஸ் ஐயர்,சஹா,கே.எஸ்.பரத்,அஸ்வின், ஜடேஜா,அக்சர் படேல்,ஜெயந்த் யாதவ்,இஷாந்த்,உமேஷ்,சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக ஸ்ரேயாஸ் ஐயர்,கே.எஸ்.பரத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதே சமயம்,ரோஹித் சர்மா,ரிஷ்ப் பந்த் ஆகியோருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ஏ ரஹானே (c), சி புஜாரா (VC), கேஎல் ராகுல், எம் அகர்வால், எஸ் கில், எஸ் ஐயர், டபிள்யூ சஹா (டபிள்யூ கே), கேஎஸ் பாரத் (டபிள்யூ கே), ஆர் ஜடேஜா, ஆர் அஷ்வின், ஏ படேல், ஜே யாதவ், ஐ சர்மா , யு யாதவ், எம்டி சிராஜ், பி கிருஷ்ணா.

Recent Posts

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

25 minutes ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

46 minutes ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

1 hour ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

2 hours ago

அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…

2 hours ago

அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…

3 hours ago