முக்கியச் செய்திகள்

146 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம் .. கடுப்பான ஏஞ்சலோ மேத்யூஸ்..!

Published by
murugan

வங்கதேசம்-இலங்கை போட்டியின் போது ​​146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத ஒன்று நடந்தது. இந்த போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு பந்து கூட விளையாடாமல் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த பேட்ஸ்மேனும் இப்படி அவுட் ஆகி பெவிலியன் திரும்பி சென்றது இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை வீரர் சதீர சமரவிக்ரம அவுட் ஆன பிறகு, ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். ஆனால் ஏஞ்சலோ மேத்யூஸின் ஹெல்மெட் சரியாக இல்லை, அந்த ஹெல்மெட் அணிவதற்கு சிரமப்பட்டார். அப்போது ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றொரு ஹேம்லெட்டை பெவிலியனில் இருந்து கொண்டு வர சைகை காட்டினார். ஆனால் டெல்மெட் எடுத்து வர நேரம் ஆன நிலையில் ​​பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன், மேத்யூஸுக்கு எதிராக கால அவகாசம் கோரி முறையிட்டார். ஷாகிப் அல் ஹசனின் முறையீட்டிற்குப் பிறகு நடுவர் மேத்யூஸை அவுட் செய்து அவரை திரும்பிச் செல்லும்படி கூறினார்.

ஐசிசி விதிகள் என்ன சொல்கிறது:

இதன் பின்னர் நடுவரும் மேத்யூஸும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் இலங்கை வீரர் மேத்யூஸ் பெவிலியன் திரும்பி சென்றார். ஐசிசி விதி 40.1.1 இன் படி, விக்கெட் வீழ்ந்த பிறகு அல்லது பேட்ஸ்மேன் ஓய்வு பெற்ற பிறகு அடுத்து வரும் பேட்ஸ்மேன் 3 நிமிடங்களில் விளையாட தயாராக இருக்க வேண்டும். இது நடக்கவில்லை என்றால் எதிர் அணி வீரர்கள் கால அவகாசம் கேட்டு மேல்முறையீடு செய்யலாம். இந்த விதி படி தான் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட் செய்யப்பட்டார். இன்று நடந்த சம்பவம் ​​146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில்  முதல் முறையாக நடந்துள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச முடிவு செய்தார். இதைதொடந்து களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 279 ரன்கள் எடுத்துள்ளது.

Published by
murugan

Recent Posts

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

10 minutes ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

14 minutes ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

1 hour ago

“இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி – தவறான செய்தி” நிதின் கட்கரி விளக்கம்.!

டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…

2 hours ago

பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.!

சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…

2 hours ago

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…

2 hours ago