#INDvENG : 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..! இங்கிலாந்து முன்னிலை..!

Published by
murugan

இங்கிலாந்து அணி 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினார். ஆனால், கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய இஷான் கிஷன் 4 ரன்களுடன் நடையை கட்டினார். பின்னர் இறங்கிய ரிஷாப் பந்த் 25, ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இந்நிலையில், மத்தியில் இறங்கிய கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசி 77*ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தனர். 157 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ஜேசன் ராய் 9 ரன்னுடன் வெளியேற பின்னர் இறங்கிய டேவிட் மாலனும் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் அதிரடியாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் அரை சதம் விளாசி 83* ரன்கள் குவித்தார். மறுபுறம் ஜானி பேர்ஸ்டோவ் 40* ரன்கள் எடுத்து கடைசிவரை இருவரும் களத்தில் நின்றனர். இறுதியாக இங்கிலாந்து அணி 18.2 ஒவரில் 2 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதல் போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: #INDvENGt20

Recent Posts

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

5 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

34 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

1 hour ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

2 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago