GT vs LSG: குஜராத் அணி அசுர பேட்டிங்…. லக்னோ அணிக்கு இமாலய இலக்கு.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரில் இன்றைய GT vs LSG போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி 227 ரன்கள் குவிப்பு.

16-வது ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி குஜராத் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் சாஹா மற்றும் கில் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாஹா 81 ரன்களுக்கு(10 போர்கள், 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்டிக் பாண்டியா, கில்லுடன் சேர்ந்து இருவரும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து விளையாடிய கில் தனது அரைசதம் கடந்தார். மறுபுறம் ஹர்டிக் பாண்டியா 25 ரன்களில் க்ருனாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கில் 94*ரன்களும், மில்லர் 20* ரன்களும்  எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

11 seconds ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

13 minutes ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

57 minutes ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

1 hour ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

2 hours ago

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…

2 hours ago