கிரிக்கெட்

#INDvsNZ : இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லை! அவருக்கு பதில் களமிறங்குவது இந்த வீரர் தான்!

Published by
பால முருகன்

உலகக்கோப்பை 2023 : இன்று நடைபெறும் 21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள்  தர்மஷாலா மைதானத்தில் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அருமையான பார்மில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த இரண்டு அணிகளும் இதுவரை 4 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், 4 போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

எனவே, இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி புள்ளி விவரபட்டியலில் முதலிடத்தில் இருக்கும். ஏற்கனவே நியூசிலாந்து அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது ஏனென்றால், அந்த அணி இந்தியாவை  விட ரன்ரேட் அடிப்படையில் அதிகமாக உள்ள காரணத்தால் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் சூர்யகுமார் மற்றும் ஷமி அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடைசியாக இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் மோதிய போட்டியில் ஷமிக்கு பதிலாக ஷார்துல் தாகூர் இடம்பெற்று இருந்தார். இதனையடுத்து இன்று நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் ஷார்துல் தாகூருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷமி  அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

இன்று இந்தியா, நியூசிலாந்து பலப்பரீட்சை..! வீழ்த்தப்போவது யார் ..? வீழப்போவது யார் ..?

அதைப்போல, ஹர்திக் பாண்டியாவுக்கும் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி அட்டகாசமான பார்மில் இருப்பதால் இன்று நடைபெறும் போட்டியிலும் அவருடைய பேட்டிங் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும்  9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 5 முறையும்,  இந்தியா 3 முறையும் வென்றுள்ளது. 1 லீக்போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் கடைசியாக 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் சந்தித்தது. இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago