இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியுடன் விளையாட உள்ளது.இப்போட்டியில் மூலம் சச்சின் சாதனையை ரோஹித் சர்மா முறியடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்து உள்ளது.
நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 4 சதங்களை விளாசி 544 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.இந்நிலையில் உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசிய வீரர்களில் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.சச்சின் உலகக்கோப்பையில் ஆறு சதங்களை விளாசி உள்ளார்.
ரோஹித் சர்மா கடந்த உலகக்கோப்பையில் ஒரு சதமும் , நடப்பு உலகக்கோப்பையில் நான்கு சதமும் அடித்து உள்ளார். உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா மொத்தமாக 5 சதம் அடித்து உள்ளார்.இதன் மூலம் இலங்கை வீரர் குமார் சங்ககாராவின் சாதனையை சமன் செய்தார்.
நாளைய போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தால் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் உள்ள சச்சின் சாதனையை சமன் செய்வார்.மேலும் ஒரு உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.
மேலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தான் ரோஹித் சர்மா இரண்டு இரட்டை சதம் அடித்து உள்ளார். இதனால் நாளைய போட்டியில் ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…