சதம் அடி நண்பா…’வைடு’ பந்தை தடுத்த சஞ்சு…வைரலாகும் அசத்தல் வீடியோ.!!

Published by
பால முருகன்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து. அடுத்ததாக 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ் தான் அணி வெற்றிபெற முக்கிய காரணம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் தான். குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 98 ரன்களை குவித்தார். 13 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனையும் படைத்தார்.

ஆனால், அவரால் சதம் மட்டும் அடிக்க முடியவில்லை. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில்,  13வது ஓவரில் ஒரு பந்து மீதமிருந்தது. அந்த நேரத்தில் சாம்சன் 28 பந்தில் 48 ரன்களில் இருந்தார், பந்து வீச்சாளர் சுயாஷ் பந்தை லெக் சைடில் வைடு திசையில் பந்து வீச முயற்சித்தார்.

அந்த பந்தை சாம்சன் தனது முன் காலை முழுவதுமாக நகர்த்தி வைடு சென்ற பந்தை தடுத்தார். அதன் பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்த்து போட்டியை முடிக்க ஒரு சிக்ஸர் அடித்து சதம் அடிக்குமாறு சாம்சன் சைகை காட்டினார். அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 4 ரன்கள் மட்டுமே அடித்ததால் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.  இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் சஞ்சு சாம்சனை பாராட்டி வருகிறார்கள்.

மேலும், இதைப்போல 2014 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் விராட் கோலிக்காக ஒருமுறை தோனி செய்ததையும் ஒப்பிட்டு மீம்ஸ் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

6 minutes ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

26 minutes ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

1 hour ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

2 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

2 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

3 hours ago