இதுதான் சிறந்த ஆட்டம்.. இந்த விதியால் தப்பிக்கும் அணிகள்.. பேட் கம்மின்ஸ் ஓபன் டாக்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல்2024: இதுதான் சிறந்த போட்டி என்று வெற்றிக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதியது. கடைசி வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை போராடிய பஞ்சாப் அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இப்போட்டியை காண வந்தவர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்தது என்றே கூறலாம். இந்த வெற்றிக்கு பிறகு ஐதராபாத் அணி கேப்டன் கூறியதாவது, இந்த போட்டி ஒரு சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எதிரணியினர் நன்றாக பந்துவீசினார்கள். இருந்தாலும், 180 ரன்கள் எட்டுவதற்கு நாங்கள் சிறந்த பேட்டிங்கை கொடுத்தோம்.

அதனை தக்க வைக்கவும் முயன்றோம். இருப்பினும், இப்போட்டி மிகவும் நெருக்கமான போட்டியாக மாறிவிட்டது. இதில் குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால் அனைத்து அணிகளுக்கும் பேட்டிங் அல்லது பவுலிங்கில் சாதகமாக உள்ளது.இந்த விதி மூலம் ஒவ்வொரு அணியிலும் பேட்டிங்கில் பலம் வாய்ந்தவையாக மாறுகிறது.

இது சாதகமானது கூட. இந்த போட்டியில் நாங்கள் ஒரு பாசிட்டிவாக தான் இருக்க முயற்சி செய்தோம். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது, ஏனென்றால் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசினார்கள். எப்படி இருந்தாலும் பவர் பிளேவில் அதிரடியாக இருக்க வேண்டும். எனவே, இந்த ஐபிஎல் தொடரில் 150 ,160 ரன்கள் எல்லாம் அடித்தால், 10 போட்டிகளில் 9 போட்டிகள் தோல்வி அடைய தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.

புதிய பந்து போட்டிக்கு முக்கியமானது என்று எங்களுக்குத் தெரியும். அதன்படி, இந்த போட்டியில் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்துவது தான் வெற்றிக்கு ஒரே வழி என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். எங்கள் அணி 180 ரன்களை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். நானும், புவியும் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்தோம். எங்களிடம் ஏராளமான இடது கை வீரர்கள், வலது கை வீரர்கள் உள்ளனர். இது எங்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Recent Posts

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

1 hour ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

1 hour ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

1 hour ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

2 hours ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

2 hours ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago