இதுதான் சிறந்த ஆட்டம்.. இந்த விதியால் தப்பிக்கும் அணிகள்.. பேட் கம்மின்ஸ் ஓபன் டாக்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல்2024: இதுதான் சிறந்த போட்டி என்று வெற்றிக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதியது. கடைசி வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை போராடிய பஞ்சாப் அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இப்போட்டியை காண வந்தவர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்தது என்றே கூறலாம். இந்த வெற்றிக்கு பிறகு ஐதராபாத் அணி கேப்டன் கூறியதாவது, இந்த போட்டி ஒரு சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எதிரணியினர் நன்றாக பந்துவீசினார்கள். இருந்தாலும், 180 ரன்கள் எட்டுவதற்கு நாங்கள் சிறந்த பேட்டிங்கை கொடுத்தோம்.

அதனை தக்க வைக்கவும் முயன்றோம். இருப்பினும், இப்போட்டி மிகவும் நெருக்கமான போட்டியாக மாறிவிட்டது. இதில் குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால் அனைத்து அணிகளுக்கும் பேட்டிங் அல்லது பவுலிங்கில் சாதகமாக உள்ளது.இந்த விதி மூலம் ஒவ்வொரு அணியிலும் பேட்டிங்கில் பலம் வாய்ந்தவையாக மாறுகிறது.

இது சாதகமானது கூட. இந்த போட்டியில் நாங்கள் ஒரு பாசிட்டிவாக தான் இருக்க முயற்சி செய்தோம். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது, ஏனென்றால் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசினார்கள். எப்படி இருந்தாலும் பவர் பிளேவில் அதிரடியாக இருக்க வேண்டும். எனவே, இந்த ஐபிஎல் தொடரில் 150 ,160 ரன்கள் எல்லாம் அடித்தால், 10 போட்டிகளில் 9 போட்டிகள் தோல்வி அடைய தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.

புதிய பந்து போட்டிக்கு முக்கியமானது என்று எங்களுக்குத் தெரியும். அதன்படி, இந்த போட்டியில் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்துவது தான் வெற்றிக்கு ஒரே வழி என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். எங்கள் அணி 180 ரன்களை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். நானும், புவியும் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்தோம். எங்களிடம் ஏராளமான இடது கை வீரர்கள், வலது கை வீரர்கள் உள்ளனர். இது எங்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

5 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

6 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

8 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

8 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

9 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

10 hours ago