மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் -ஸ்ரேயாஸ் ஐயர்..!!

Published by
பால முருகன்

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

கடந்த மார்ச் மாதம்  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே  3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் விலகினார். மேலும் சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் சீசனிலும் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷாப் பன்ட் கேப்டனாக செயல்பட்டார்.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் கூறியது ” நான் தோள்பட்டை காயத்தில் இருந்து விரைவாக மீண்டு வருவதால், மீதமுள்ள  ஐ.பி.எல். தொடருக்கான போட்டிகளில் கண்டிப்பாக விளையாடுவேன்  கேப்டனாக செயல்படுவது குறித்து எங்கள் டெல்லி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். என் இலக்கு எங்கள் டெல்லி அணிக்கு கோப்பை வென்று தருவது தான். இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி தான் உள்ளது.  இதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

35 minutes ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

1 hour ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

2 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

3 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

3 hours ago