மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் விலகினார். மேலும் சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் சீசனிலும் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷாப் பன்ட் கேப்டனாக செயல்பட்டார்.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் கூறியது ” நான் தோள்பட்டை காயத்தில் இருந்து விரைவாக மீண்டு வருவதால், மீதமுள்ள ஐ.பி.எல். தொடருக்கான போட்டிகளில் கண்டிப்பாக விளையாடுவேன் கேப்டனாக செயல்படுவது குறித்து எங்கள் டெல்லி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். என் இலக்கு எங்கள் டெல்லி அணிக்கு கோப்பை வென்று தருவது தான். இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி தான் உள்ளது. இதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…