நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று(பிப்ரவரி 21) வெலிங்டன், பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், இந்திய அணியில், பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், புஜாரா, விராத் கோஹ்லி(கேப்டன்), ரகானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இந்திய அணியில், சகா, சுப்மான் கில், நவ்தீப் சைனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது வரை இந்திய அணி ஷா, புஜாரா, கோலி ஆகிய மூன்று விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களில் ஆடிக்கொண்டு இருக்கிறது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…