#INDvNZ : தொடரில் முன்னிலை.! 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.!

Published by
மணிகண்டன்

19.4 ஓவரில் 5விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குபதில், டேரில் மிட்செல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 3-வது பந்திலே புவனேஷ்குமார் ஓவரில் போல்ட் ஆனார்.

அடுத்து இறங்கிய மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்டில் உடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினார். இருவரும் கூட்டணியில் 110 ரன்கள் சேர்ந்தது. அதிரடியாக விளையாடிய அரைசதம் விளாசி 63 ரன்கள் குவித்து 14-வது ஓவரில் 2-வது பந்தில் அஸ்வின் வீசிய சூழலில் போல்ட் ஆனார். அடுத்து இறங்கிய க்ளென் பிலிப்ஸ் அதே ஓவரில் 5-வது பந்தில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். இருப்பினும் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் சிறப்பாக விளையாடிய 42 பந்தில் 4 சிக்ஸர் , 3 பவுண்டரி என மொத்தம் 70 ரன்கள் விளாசி ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த டிம் சீஃபர்ட் 12, ரச்சின் ரவீந்திரன் 7 ரன்கள் எடுக்க இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் புவனேஷ்குமார், அஸ்வின் தலா 2, தீபக் சாஹர், சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

20 ஓவரில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க முதல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 15 அவுட் ஆகி வெளியேற இன்னோர் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி 36 பந்தில் 48 ரன்கள் அடித்தார். சூரியகுமார் யாதவ் தனது அதிரடியான ஆட்டத்தால் 40 பந்துகளில் 62ரன்கள் எடுத்து போல்ட் ஓவரில் அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் 5,4 ரன்களில் வெளியேற, ரிசப் பண்ட் 17 ரன்கள் அடித்து களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார்.

இறுதியாக இந்திய அணி 19.4 ஓவரில் 5விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

16 minutes ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

46 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

4 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

5 hours ago