இந்தியா 337 ரன்னுக்கு ஆல்அவுட் .. இங்கிலாந்து 241 ரன்கள் முன்னிலை ..!

Published by
murugan

முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்னுக்கு ஆட்டமிழந்தது

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிபிலி 87, பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க வீரர்களாக இறங்கிய சுப்மான் கில் 29, ரோகித் 6 ரன்களுடன் வெளியேறினார். பின்னர், இறங்கிய துணை கேப்டன் ரஹானே 1 , கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார்கள். இதனால், சரிவில் இருந்த இந்திய அணியை புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்னை சற்று உயர்த்தினார்கள்.

நேற்றைய 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்தநிலையில், இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசி 85* ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால், இங்கிலாந்து அணி 266 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 73, பண்ட் 91 ஷிங்டன் சுந்தர் 85*  ரன்கள் எடுத்தனர். தற்போது இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சிஸை விளையாடி வருகிறது.

Published by
murugan
Tags: #INDvENG

Recent Posts

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

1 minute ago

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

33 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

15 hours ago