இந்திய அணி 21 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லாதம், வில் யங் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 4 ஓவரில் வில் யங் 4 ரன் எடுத்து கோலியிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். பின்னர், அதே ஓவரில் கடைசி பந்தில் டாம் லாதம் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் 8, ராஸ் டெய்லர் 1, ஹென்றி நிக்கோல்ஸ் 7 மற்றும் ரச்சின் ரவீந்திரா 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் இறங்கிய ஜேமிசன் மட்டும் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுக்க இறுதியாக நியூசிலாந்து 28.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 62 ரன் எடுத்தனர். இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4, முகமது சிராஜ் 3, அக்சர் படேல் 2, ஜெயண்ட் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர். இதனால், 263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், புஜாரா இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கத்தில் இருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இவர்கள் கூட்டணியில் 69 ரன்கள் குவித்தனர். இந்நிலையில், 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 21 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. களத்தில் மயங்க் அகர்வால் 38*, புஜாரா 29* ரன்களுடன் உள்ளனர்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…
சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…
சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…
சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…