2வது டெஸ்ட் : நிதானமான முதல் நாள் ஆட்டம்.! வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 288 ரன்கள் குவிப்பு.!

Published by
மணிகண்டன்

மேற்கிந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி வேஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் 3 ஒருநாள் , 5டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஏற்கனவே முடிந்து விட்டது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நேற்று 2வது டெஸ்ட் போட்டி  டிரினிடட் மைதானத்தில் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் போட்டியிலேயே அசத்திய ஜெய்ஸ்வால் , கடந்த முறை சதம் கண்ட ரோஹித் ஷர்மா ஆகியோர் மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே  57, 80 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து களமிறங்கிய கில் மற்றும் ரகானே முறையே 10 மற்றும் 8  ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 87, ஜடேஜா 36 ரன்களுடன் இன்னும் களத்தில் நிற்கின்றனர்.

இரண்டாவது டெஸ்ட் முதல் நாள் முடிவில், இந்திய கிரிக்கெட் அணி நிதானமாக விளையாடி 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. கடந்த முறை கேப்டன் ரோஹித் ஷர்மா சதம் விளாசியது போல இன்று இரவு இரண்டாம் நாளில் விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

14 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

1 hour ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago