ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா மீண்டும் முதலிடம்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா. அதன்படி, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 25 போட்டிகள், 3,031 புள்ளிகள், 121 ரேட்டிங் பெற்று இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. 116 ரேட்டிங்களுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும், 114 ரேட்டிங்களுடன் இங்கிலாந்து 3ம் இடத்திலும் உள்ளன.

இதனிடையே, 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் அபார வெற்றி பெற்றது முதல் நாக்பூரில் ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்தியது காரணத்தால், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மீண்டும் இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அணி:

இந்திய அணி: ரோகித்சர்மா (கேப்டன்), விராட்கோலி, சுப்மன்கில், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ்யாதவ், ஜெய்தேவ் உனத்கட், புஜாரா, ரஹானே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி: கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்லிஷ், கவாஜா, லபுசக்னே, லயன், மிட்ஷெல் மார்ஷ், மர்பி, ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

7 minutes ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

19 hours ago