அயர்லாந்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி..!

Published by
அகில் R

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 15-வது போட்டியாக இன்று இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.

தொடக்க வீரர்களின் விக்கெட் வீழ்ந்த பின் களமிறங்கிய முஷீர் கான், கேப்டன் உதய் சஹாரன் இருவரும் கூட்டணி அமைத்து விளையாடினர். இருவரும் மிக சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அதில் முஷீர் கான் 118 எடுத்து ரன் அவுட் ஆனார். பின் உதய் சஹாரன் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 301 எடுத்தது.

அதை தொடர்ந்து 302 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் அந்த அணி 29.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 100 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய  அணியில் நமன் திவாரி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

 

Published by
அகில் R

Recent Posts

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

48 minutes ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

3 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

3 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

4 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

5 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

6 hours ago