19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 15-வது போட்டியாக இன்று இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.
தொடக்க வீரர்களின் விக்கெட் வீழ்ந்த பின் களமிறங்கிய முஷீர் கான், கேப்டன் உதய் சஹாரன் இருவரும் கூட்டணி அமைத்து விளையாடினர். இருவரும் மிக சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அதில் முஷீர் கான் 118 எடுத்து ரன் அவுட் ஆனார். பின் உதய் சஹாரன் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 301 எடுத்தது.
அதை தொடர்ந்து 302 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் அந்த அணி 29.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 100 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணியில் நமன் திவாரி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…