இலங்கை மற்றும் ஜிம்பாவே அணியுடனான தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலக நாடுகள் திணறி வருகின்றது.கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தான் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கவும் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.பொருளாதார ரீதியாக உலக நாடுகள் சரிவை கண்டு உள்ளது.அதுமட்டும் அல்லாமல் விளையாட்டு உலகமும் முடங்கி உள்ளது. விளையாட்டு போட்டிகள் மூலமாக கிடைக்கும் வருவாயும் தடைபட்டுள்ளது.
குறிப்பாக கோடைகாலத்தில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் தடைப்பட்டுள்ளது.அந்த வகையில் தான் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது ஜூன் 24 ஆம் தேதி இலங்கை அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி -20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜிம்பாவே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.கொரோனா பரவல் காரணமாக தற்போது ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…