இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 244 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து, இறங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழக்க, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 53 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நேற்று 2-வது இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்த நிலையில், இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 36 ரன்னில் 9 விக்கெட்டை இழந்தனர். கையில் ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமியின் வெளியேறியதால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 4 , ஹேசில்வுட் 5 விக்கெட்டை வீழ்த்தினர். இந்நிலையில், இந்திய அணி 36 ரன்கள் எடுத்த நிலையில் 90 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இன்று தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடங்க வீரர்களாக மத்தேயு வேட், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடினர்.
நிதானமாக விளையாடி வந்த மத்தேயு வேட் 33 ரன்னில் விக்கெட்டை இழக்க, இதைதொடர்ந்து, இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே வந்த வேகத்தில் 6 ரன் எடுத்து நடையை கட்ட அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் அரைசதம் அடித்து 51 ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 21 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 93 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…