முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணி படுதோல்வி..!

Published by
murugan

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 244 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து, இறங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழக்க, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 53 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி  நேற்று 2-வது இன்னிங்சை  தொடங்கியது.

நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்த நிலையில், இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 36 ரன்னில் 9 விக்கெட்டை இழந்தனர். கையில் ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமியின் வெளியேறியதால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 4 , ஹேசில்வுட் 5 விக்கெட்டை வீழ்த்தினர்.  இந்நிலையில், இந்திய அணி 36 ரன்கள் எடுத்த நிலையில் 90 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இன்று தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடங்க வீரர்களாக மத்தேயு வேட், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடினர்.

நிதானமாக விளையாடி வந்த மத்தேயு வேட் 33 ரன்னில் விக்கெட்டை இழக்க, இதைதொடர்ந்து, இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே வந்த வேகத்தில் 6 ரன் எடுத்து நடையை கட்ட அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் அரைசதம் அடித்து 51 ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 21 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 93 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

 

Published by
murugan
Tags: AUSvIND

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago