வாழ்த்துக்கள் CSK.! குறைந்த பட்சம் இவர்களுக்காவது மரியாதை கிடைப்பதில் மகிழ்ச்சி.! சாக்ஷி மாலிக் வேதனை டிவீட்.!

Published by
மணிகண்டன்

இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் சென்னை அணி வெற்றி குறித்து டிவீட் செய்துள்ளார்.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சென்னை அணிக்கும், கேப்டன் தோனிக்கும் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது டிவிட்டர் பக்கத்தில் சென்னை அணிக்கும், கேப்டன் தோனிக்கும் தனது வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார். அந்த வாழ்த்து செய்தியோடு,  குறைந்த பட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காவது உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான எங்கள் போராட்டம் இன்னும் தொடர்கிறது என தங்கள் போராட்டம் குறித்தும் பதிவிட்டு இருந்தார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 38 நாட்களாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர்களும் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

14 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

15 hours ago