கிரிக்கெட்

#INDvENG : ரோஹித், சூர்யா அசத்தல் பேட்டிங்! இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த இலக்கு?

Published by
பால முருகன்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-யின் 29-வது லீக் போட்டியில் இன்று இந்தியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டியானது லக்னோவில் இருக்கும் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கட்ட ஆட்டக்காரர்கள் ரோஹித் மற்றும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி வந்தனர். திடீரென கில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்ததாக களத்திற்கு வந்த விராட் கோலி டக்அவுட் ஆகி வெளியேறினார். அதைப்போல ஷ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் திரும்பினார்.

பிறகு வந்த கே.எல்.ராகுல் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து நன்றாக விளையாடி கொண்டிருந்தார். ஒரு பக்கம் சிக்ஸர் பவுண்டரி என ரோஹித் வெளுத்து வந்த நிலையில், மற்றோரு பக்கம் கே.எல்.ராகுலும் வெளுத்து வாங்கினார். பிறகு ராகுலும் 39 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.

பின் நிதானமாக விளையாடி வந்த ரோஹித் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின் பேட்டிங் செய்ய வந்த சூரியகுமார் யாதவ் நிதானமாக விளையாடி வந்தார். மறுமுனைக்கு வந்த ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அவருக்கு அடுத்தபடியாக வந்த முகமது ஷமியும் 1 ரன்கள் எடுத்து வெளிறினார்.

பின் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கினார் ஒரு பக்கம் ரன்களை அடிக்காமல் இவர் இருந்த நிலையில், மற்றோரு பக்கம் சூர்யா  சிக்ஸர் பவுண்டரி என ஒரு அதிரடி ஆட்டம் காட்டினார். அதிரடி காட்டியா சூர்யா 46-வது ஓவரில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 49 ரன்களுக்கு வெளியேறினார்.  அவருக்கு அடுத்ததாக பும்ரா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். குல்தீப் யாதவ் 9 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.  பந்துவீச்சை பொறுத்தவரை இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்களும். அடில் ரஷித்2 விக்கெட்களையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்கள். இந்திய அணி 229 ரன்கள் அடித்திருக்கும் நிலையில். அடுத்ததாக 230 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago