முக்கியச் செய்திகள்

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

Published by
அகில் R

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணியின் கில்லும், பண்டும் அணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக விளையாடி வந்தனர்.

இதில், இருவருமே மிகச் சிறப்பாகவே பேட்டிங்கில் ஜொலித்தனர். மேலும், இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். அதில், சுப்மன் கில் 119* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருடன் விளையாடிய பண்ட் 109 ரன்கள் எடுத்து மெஹதி ஹசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு கே.எல்.ராகுல், கில்லுடன் இணைந்து விளையாடி வந்தார்.

சரியாக 64 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 514 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அப்போது, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அந்த இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தார். இந்த முடிவை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் 5 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டரை நாள் மீதம் இருக்கும் நிலையில் இப்போதே பேட்டிங்கை டிக்ளேர் செய்தது சற்று யோசிக்க வைத்துள்ளது.

கையில் இரண்டு நாட்கள் இருப்பதால் இன்று முழுவதும் இந்திய அணி பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்த்தனர். அதனால், ரோஹித் ஷர்மாவின் இந்த டிக்ளேர் முடிவு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இரண்டரை நாள் இருப்பதால், நிர்ணயிக்கப்பட்ட இந்த 515 ரன்கள் என்பதை நிதானமாக விளையாடினால் கூட வங்கதேச அணியால் இலக்கை எட்டிவிட முடியும்.

இந்திய அணியின் வலுவான பவுலிங் பட்டாளத்தால் வங்கதேச அணி இன்றைய நாளை சமாளிப்பதே கடினமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாகவே வங்கதேச அணி இந்த போட்டியை கையாண்டு வருகிறது.

அதன்படி, வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டுகளை இழக்காமல் அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர். இதனால், இந்த வலுவான கூட்டணி இன்று விக்கெட்டை இழக்காமல் நாளைய நாளும் தொடர்ந்தால் அடுத்தடுத்து களமிறங்கும் வங்கதேச வீரர்களுக்கு கடைசி நாள் இந்த இலக்கு எளிதானதாக அமைந்து விடும் என கருதப்படுகிறது.

இதனால், இந்தியா அணி பவுலர்கள் முடிந்த அளவுக்கு இன்று 5 விக்கெட்டுகளையாவது கைப்பற்ற வேண்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அணி வங்கதேச அணியை கட்டப்படுத்துமா அல்லது வங்கதேச அணி இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்களா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

Published by
அகில் R

Recent Posts

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

6 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

6 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

6 hours ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

7 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

8 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

9 hours ago