ஐபிஎல் 2023: நாளைய போட்டியில் புதிய சாதனை படைக்க உள்ளார் எம்.எஸ்.தோனி!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் தொடரின் நாளைய இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் எம்.எஸ்.தோனி.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்த நிலையில், நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மாலை 7.30 மணியளவில் இப்போட்டி தொடங்குகிறது.

சென்னை அணி இதுவரை 10 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி ஒரு சாதனையை படைத்துள்ளது. மறுபக்கம், விளையாடிய இரண்டு சீசனில் ஒரு பட்டத்தையும் வென்று, தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குஜராத் அணி.நாளைய இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் பெரும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக மோதும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சமயத்தில் ஐபிஎல் தொடரின் நாளைய இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி. அதாவது, குஜராத்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார் எம்எஸ் தோனி. CSK-ஐ ஐந்து முறை சாம்பியனாக்குவதன் மூலம் இந்த தருணத்தை அவரால் சிறப்பாக்க முடியும்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தோனி 15 போட்டிகளில் 104 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால்,185.71 என்ற வியக்கத்தக்க ஸ்ட்ரைக் ரேட்டுடன் 8 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்த ஆண்டு சிஎஸ்கேயின் ஃபினிஷராக இருந்துள்ளார். எனவே,  புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் எம்எஸ் தோனி நாளை வரலாற்றில் 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago