DC Won [Image Source : IPLT20]
ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs DC போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய டேவிட் வார்னர், பிருத்வி ஷா இணைந்து அதிரடியாக விளையாடிய நிலையில், பிருத்வி ஷா அரைசதம் கடந்தார். அதன்பின் ரோசோவும் சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்க விட்டு 80 ரன்களை கடக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் ஜோடியில் தவான் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரையடுத்து, களமிறங்கிய தைடே காயம் காரணமாக 55 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அதன்பின், லிவிங்ஸ்டன் களமிறங்கி அதிரடி காட்டி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருந்தும், பஞ்சாப் அணி வீரர்கள் டெல்லி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 94 ரன்களும், அதர்வ தைடே 55 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 22 குவித்துள்ளனர். டெல்லி அணியில் அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…