#IPL BREAKING: இறுதிவரை திக் திக்..! மும்பையை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs MI போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில்  மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் களமிறங்கிய க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் ஸ்டோனிஸ் அரைசதம் கடந்தார். முடிவில், லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் மும்பை அணியில் முதலில் களமிறங்கிய இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஜோடி நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

அவரையடுத்து, களமிறங்கிய நேஹால் வதேரா மற்றும் டிம் டேவிட் தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் எடுக்க, வதேரா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பரபரப்பான ஆட்டத்தின் இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட், கேமரூன் கிரீன் களத்தில் நின்றனர். இருந்தும் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 59 ரன்களும், ரோஹித் சர்மா 37 ரன்களும், டிம் டேவிட் 32* ரன்களும் குவித்துள்ளனர். லக்னோ அணியில் ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 hour ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago