பும்ரா ஒரு பேபி பவுலர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் -ரவுண்டர் அப்துல் ரசாக் கூறினார்.மேலும் நான் விளையாடிய காலகட்டத்தில் பலவிதமான ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் பும்ராவின் பந்துவீச்சை மிகவும் எளிமையாக எதிர்கொள்வேன் என்று கருத்து கூறினார்.இவர் இவ்வாறு கூறியது இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்துலை கடுமையாக விமர்சித்தனர்.
மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து அவர் கூறுகையில், விராட் கோலி மட்டும் சச்சினை போல நல்ல மதிப்பெண்களை பெற்றுவருகிறார்.ஆனால் விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் சச்சின் வேறு ,கோலி வேறு என்றும் தெரிவித்தார்.இந்த கருத்து மேலும் இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பும்ராவை குறிவைத்து கூறியதற்கு இந்திய அணியின் ஆல் -ரவுண்டராக ஜொலித்த இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய ரசிகர்களே இம்மாதிரியான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் .இந்த கருத்தை ஒதுக்குங்கள் . இவற்றை எல்லாம் படித்து விட்டு சிரித்து விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…