இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூஸிலாந்து அணியுடன் வருகின்ற 14-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி போட்டியில் விளையாட முடியும்.
இந்த இரு அணிகளும் கடந்த 25 -ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் லீக் போட்டியில் மோதியது.இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தான் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் சதம் அடித்தார்.மேலும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்த அணி இறுதி போட்டிக்கு போகப்போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் குவிந்து உள்ளது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…