இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகிய 5 வலை பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
க்ருனல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,நேற்று நடைபெற இருந்த 2-வது டி20 போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கையில் உள்ள இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு 2-வது மற்றும் 3-வது டி 20 போட்டிகளுக்கான இந்திய அணி புதிய வீரர்களின் பெயர் வெளிப்பட்டுள்ளது.
அதில், இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகிய 5 வலை பந்துவீச்சாளர்கள் மீதமுள்ள டி20 போட்டிகளுக்கான அணியில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27 ஆம் தேதி க்ருனல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட பின்னர், அணியின் அனைத்து வீரர்களுக்கும், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
க்ருனல் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எட்டு உட்பட உட்பட அனைவருக்கும் சோதனை முடிவுகள் நெகடிவ் என வந்ததுள்ளது. இருப்பினும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக க்ருனல் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேர் ஹோட்டலில் தொடர்ந்து தனிமையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…