இந்த மைதானத்தில் விளையாடுவது கஷ்டம் தான் ..! தோல்வியை ஒப்புக்கொண்ட கேப்டன் ரோஹித் .!!

Published by
அகில் R

ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்று இந்திய அணி, அமெரிக்கா அணியை வீழ்த்திய பிறகு ரோஹித் சர்மா அந்த போட்டியின் கருத்துக்களை பகிருத்திருந்தார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் அமெரிக்கா அணியை, இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்க அணி பேட்டிங் களமிறங்கி தட்டு தடுமாறி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனை தொடர்ந்து இலக்கை எட்ட பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி முதலில் சற்று சொதப்பினாலும், அதன் பிறகு சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபேவின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. அதிலும் சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்து அசத்தியிருந்தார். இந்த போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா நடைபெற்ற போட்டியின் வெற்றியை குறித்தும் அந்த போட்டியின் சில கருத்துக்களை குறித்தும் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது கஷ்டம் தான் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஷிவம் துபே மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த போட்டியில் விளையாடிய அமெரிக்க அணியை சேர்ந்த பல வீரர்களை நான் இந்தியாவில் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் சில போட்டிகளிலும் நான் விளையாடி இருக்கிறேன். நான் இந்தியாவில் பார்த்த வீரர்கள் இங்கு வந்து அமெரிக்கா அணிக்காக விளையாடுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.

அவர்கள் அனைவருமே கடினமான உழைப்பின் மூலம் தான் இங்கு வந்து விளையாடி வருகின்றனர். மேலும், இந்த மைதானத்தில் இங்கு வந்து விளையாடுவது என்பது எளிதான விஷயம் கிடையாது. இருப்பினும் நாங்கள் 3 வெற்றிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறோம்”, என கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

5 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

7 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

8 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago