1000-வது ஐபிஎலில் சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால்; மும்பை அணிக்கு இமாலய இலக்கு.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs RR போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கி அதிரடியாக பேட் செய்து 212/7 ரன்கள் குவிப்பு.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎலின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையின் வான்கடே மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அணி 72 ரன்கள் எடுத்த போது பட்லர் 18 ரன்களுக்கு விக்கெட் இழந்தார். இதையடுத்து பேட்டிங் இறங்கிய சாம்சன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். இதையடுத்து ஹோல்டர்(11) மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர்(8) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 8 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் குவித்தார். மும்பை அணி தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட்களும், பியூஷ் சாவ்லா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Published by
Muthu Kumar

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

2 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago