ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் 2024: டெல்லி அணி 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும்  டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும் பறித்தனர்.

லக்னோ அணியில் கே.எல் ராகுல்  39 ரன்களும், ஆயுஷ் படோனி 55* ரன்கள் எடுத்து  கடைசிவரை களத்தில் இருந்தார். 168 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, டேவிட் வார்னர்  இருவரும் களமிறங்கினர்.  டேவிட் வார்னர்  4-வது ஓவரில் 8 ரன்கள்  எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களமிறங்கினார்.  மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த பிருத்வி ஷா  32 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். பிறகு கேப்டன்  ரிஷப் பந்த் , மெக்குர்க் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி  அணியின் ரன்களை  சேர்த்தனர்.

இதில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த மெக்குர்க் 55 ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை இழந்தார்.  இருப்பினும் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 41 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக டெல்லி அணி 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டையும், யாஷ் தாக்கூர்,  நவீன்-உல்-ஹக் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.  டெல்லி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வி  தழுவியுள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி  இதுவரை 5 போட்டிகள் விளையாடி 3 போட்டியில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.

Published by
murugan

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago