நேற்றை போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 45 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்கள் எடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மூன்றாவது வீரராக ஜோ ரூட் களமிறங்கி நிதானமாக விளையாடிய 25 பந்தில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் ஒரு பவுண்டரி அடித்தார்.
இந்நிலையில் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக தற்போது ஜோ ரூட் உள்ளார்.உலகக்கோப்பையில் இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச் 471 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது.
ஆனால் நடப்பு உலகக்கோப்பையில் ஜோ ரூட் 483 ரன்கள் அடித்து முதல் இடத்தை பிடித்து உள்ளார்.
483 * – ஜோ ரூட், 2019
471 – கிரஹாம் கூச், 1987
444 – கெவின் பீட்டர்சன், 2007
424 * – ஜானி பேர்ஸ்டோவ், 2019
422 – ஜொனாதன் ட்ராட், 2011
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…