15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தோனி 50 ரன்களும், உத்தப்பா 28 ரன்களும், ஜடேஜா 26 ரன்கள் குவித்தனர்.
132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரஹானே – வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த நிலையில், 16 ரன்கள் குவித்து வெளியேறினார். அதனையடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா, ரஹானேவுடன் இணைத்து சிறப்பாக ஆடிவந்தார்.
இருவரின் கூட்டணியில் அணியில் ஸ்கொர் உயர, 21 ரன்கள் அடித்து நிதிஷ் ராணா வெளியேறினார். அவரைதொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ரஹானே அதிரடியாக ஆடி 44 ரன்கள் குவித்து வெளியேற, இறுதியாக கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் பிராவோ. 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…