சர்வதேச டி20 போட்டிகளில் அதிகம் அரைசதமடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை கேப்டன் விராட் கோலி சத்தம் போடாமல் சமன் செய்துள்ளார்.
சிட்னியில் இன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – தவான் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தை பூர்த்திசெய்தார். பின்னர் 85 ரன்கள் அடித்து கோலி தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்றது. டி20 தொடரின் நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை சத்தம் போடாமல் விராட் கோலி சமன் செய்துள்ளார். கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் தலா 25 அரைசதங்கள் அடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து 19 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் 3ம் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…