ரோஹித் சர்மா அடித்த அந்த 4! “Yes boy” என கத்திய கோலி.. வைரலாகும் வீடியோ!

Published by
Surya

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்த 4-க்கு இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி “Yes boy” என கத்திய வீடியோ, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் அடித்தது.

அதனைதொடர்ந்து இங்கிலாந்து அணி, தற்பொழுது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா, நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 2 ஆம் ஓவர் முதல் பந்தில் 4 அடித்தார். அவர் அடித்த நான்கு ரன்களுக்கு டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கோலி, “Yes boy” என கத்தினார். தற்பொழுது இந்த காட்சிகள், சமூகவலைத்தளத்தில் பரவிவருகின்றனர். மேலும், அவர்களிடையே நட்புறவு நீடிப்பது, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

கடந்த சில நாட்களாக கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையிலான நட்புறவு குறித்து பலவிதமான தகவல்கள் வருகின்றனர். குறிப்பாக, 2017 சாம்பியன்ஸ் டிராபியின் போதும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போதும், ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுக்காமல் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போதும் இதுபோன்ற செய்திகள் பரவத்தொடங்கியது, குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

6 minutes ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

42 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

4 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

5 hours ago