கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 25 – வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தனர்.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக சுப்மன் கில், நிதீஷ் ராணா இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே நிதீஷ் ராணா 15 ரன்னில் ஸ்டம்ப் அவுட்டானார். இதைத்தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவர் 19 ரன்கள் எடுத்து லலித் யாதவிடம் கேட்சை கொடுத்தார்.
பின்னர் இறங்கிய மோர்கன், சுனில் நரேன் இருவரும் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் நிதானமாக விளையாடி வந்த பசுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்னில் ஸ்மித்திடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் மத்தியில் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் 4 சிக்சர், 2 பவுண்டரி என மொத்தம் 45* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர். 155 ரன்கள் இலக்குடன் டெல்லி களமிறங்கவுள்ளது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…