ஐபிஎல் 2024: லக்னோவை துவம்சம் செய்த பிலிப் சால்ட்… கொல்கத்தா அபார வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் 2024:  கொல்கத்தா அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டி ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர்.

லக்னோ அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களும்,  கேஎல் ராகுல் 39 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக  மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டை பறித்தார். கொல்கத்தா அணி 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன், பிலிப் சால்ட் இருவரும் களமிறங்கினர்.

2-வது ஓவரிலே சுனில் நரேன் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 7 ரன் எடுத்து 4-வது ஓவரில்விக்கெட்டை பறிகொடுத்ததால் பவர் பிளே ஓவர் முடிவதற்குள் கொல்கத்தா 2 விக்கெட்டை இழந்தது. இதைத்தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பிலிப் சால்ட் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.

இதற்கு இடையில் அதிரடியாக விளையாடி வந்த பிலிப் சால்ட்  47 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சர் என மொத்தம் 89*ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதே நேரத்தில் மறுபுறம் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 38 பந்தில் 38* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி தலா மூன்று போட்டியில் வெற்றியும், மூன்று போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது.

Published by
murugan

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

3 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

4 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

5 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

5 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

6 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

6 hours ago