ஐபிஎல் 2024: லக்னோவை துவம்சம் செய்த பிலிப் சால்ட்… கொல்கத்தா அபார வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் 2024:  கொல்கத்தா அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டி ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர்.

லக்னோ அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களும்,  கேஎல் ராகுல் 39 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக  மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டை பறித்தார். கொல்கத்தா அணி 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன், பிலிப் சால்ட் இருவரும் களமிறங்கினர்.

2-வது ஓவரிலே சுனில் நரேன் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 7 ரன் எடுத்து 4-வது ஓவரில்விக்கெட்டை பறிகொடுத்ததால் பவர் பிளே ஓவர் முடிவதற்குள் கொல்கத்தா 2 விக்கெட்டை இழந்தது. இதைத்தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பிலிப் சால்ட் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.

இதற்கு இடையில் அதிரடியாக விளையாடி வந்த பிலிப் சால்ட்  47 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சர் என மொத்தம் 89*ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதே நேரத்தில் மறுபுறம் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 38 பந்தில் 38* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி தலா மூன்று போட்டியில் வெற்றியும், மூன்று போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

26 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago