INDvAFG [File Image]
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி இரவு 7:00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. மொஹாலி மற்றும் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர்.
இந்த தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி இன்று களம் இறங்கவுள்ளது. கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங்-11ல் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.
அதன்படி ஆவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோர் பிளேயிங்-11ல் இடம் பெறலாம். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் பிளேயிங்-11 இல் சேர்க்கப்படலாம், முகேஷ் குமாருக்குப் பதிலாக ஆவேஷ் கானும் சேர்க்கப்படலாம். இது தவிர ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…