தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்…போட்டிக்கு பிறகு ஜெய்ஸ்வால் ஸ்பீச்.!!

Published by
Muthu Kumar

நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால், தோனி மற்றும் கோலியுடன் பேசியது தனது ஆட்டத்திற்கு உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின, இதில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 202/5 ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் என மொத்தம் 77 ரன்கள் அதிரடியாக குவித்து, சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். போட்டிக்கு பிறகு பேசிய அவர், அனுபவம் நிறைந்த வீரர்களான தோனி மற்றும் விராட் கோலியுடன் தான் நிறைய பேசியதாகவும், அது எனது ஆட்டத்திற்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

நான் தொடர்ந்து அவர்களுடன் கிரிக்கெட் குறித்து உரையாடுவது தனது பேட்டிங்கிற்கு நிறைய கற்றுக்கொண்டதாக ஜெய்ஸ்வால் கூறினார். மேலும் தோனியும் ஆட்டத்திற்கு பிறகு அளித்த பெட்டியில் ஜெய்ஸ்வால் பேட்டிங் குறித்து புகழ்ந்து பேசினார், ஜெய்ஸ்வால் நல்ல பந்துகளிலும் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார் என்று தோனி கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

24 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

2 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

4 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

4 hours ago