jaishwal csk-rr [Representative Image]
நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால், தோனி மற்றும் கோலியுடன் பேசியது தனது ஆட்டத்திற்கு உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின, இதில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 202/5 ரன்கள் குவித்தது.
ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் என மொத்தம் 77 ரன்கள் அதிரடியாக குவித்து, சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். போட்டிக்கு பிறகு பேசிய அவர், அனுபவம் நிறைந்த வீரர்களான தோனி மற்றும் விராட் கோலியுடன் தான் நிறைய பேசியதாகவும், அது எனது ஆட்டத்திற்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
நான் தொடர்ந்து அவர்களுடன் கிரிக்கெட் குறித்து உரையாடுவது தனது பேட்டிங்கிற்கு நிறைய கற்றுக்கொண்டதாக ஜெய்ஸ்வால் கூறினார். மேலும் தோனியும் ஆட்டத்திற்கு பிறகு அளித்த பெட்டியில் ஜெய்ஸ்வால் பேட்டிங் குறித்து புகழ்ந்து பேசினார், ஜெய்ஸ்வால் நல்ல பந்துகளிலும் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார் என்று தோனி கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…