ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடர் வருகின்ற 23-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3-ம் தேதி வரை 5 நகரங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. டி20 போட்டிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராய்பூர் மற்றும் பெங்களூருவில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் உலகக்கோப்பையில் விளையாடிய அனைத்து மூத்த வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பையில் விளையாடிய சூரியகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவர் மட்டுமே இந்த டி20 தொடரில் விளையாட உள்ளனர். மற்ற வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் வரும் 23-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…