‘தப்பு செய்ததை சென்னையில் மாற்றி காட்டுவோம் ..’ தோல்விக்கு பிறகு பேட் கம்மின்ஸ் பேட்டி!

Published by
அகில் R

சென்னை : நேற்று நடைபெற்ற குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியிடம், ஹைதரபாத் அணி தோல்வியடைந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தோல்வியை பற்றி கூறி பேசி இருந்தார்

ஐபிஎல் தொடரானது தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தொடரின் முதல் குவாலிபயர் போட்டியானது நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த குவாலிபயர் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் அதிரடியாக விளையாடலாம் என களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

அதை தொடர்ந்து ராகுல் த்ரிப்பாத்தியின் நிதானமான ஆட்டத்தால், ஹைதரபாத் அணி சரிவிலிருந்து மீண்டது, சிறப்பாக விளையாடிய அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து கிளாஸ்ஸனும், கம்மின்சும் சற்று அதிரடி காட்ட ஹைதராத் அணி இறுதியில் 19.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து எளிதான இலக்கை அடைய களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடினார்கள்.

தொடக்க வீரர்களை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரின் ஆட்டத்தால் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இந்த போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தோல்வியை பற்றி கூறி இருந்தார்.

அவர் பேசுகையில், “இந்த தோல்வியை நாங்கள் பின்னால் வைத்து முன்னோக்கி செல்ல வேண்டும். டி20 கிரிக்கெட்டில், சில கடுமையான நாட்களும் உங்களுக்கு உண்டு. இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு மேலும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சில வீரர்களுக்கு நல்ல ஒரு தொடக்கம் அமையவில்லை, மேலும் எங்களால் சிறப்பான பந்து வீச்சையும் கொடுக்க முடியாவில்லை. விக்கெட்டுகள் அதிமாக சரிந்ததால், கூடுதல் பேட்டிங் தேவை என்று நாங்கள் நினைத்தோம்.

மேலும், கொல்கத்தா அணி நன்றாக பந்து வீசினார்கள், அதன் பின் விக்கெட் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. இந்த சீசனில் எங்களுக்கு இன்னும் நல்ல வேலை இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம், தப்பு செய்ததை சென்னையில் மாற்றி காட்டுவோம் என நம்புகிறேன்”, என்று போட்டி முடிந்த பிறகு பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்

Published by
அகில் R

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago