2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் மொத்தம் 13 தமிழக வீரர்கள் விளையாடவுள்ளனர்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நெருங்கிவரும் நிலையில், தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், 57 வீரர்களை ரூ.143.69 கோடிக்கு ஏலத்தில் எடுத்தன.
இந்தாண்டு நடந்த ஏலத்தில் தமிழக வீரர்கள் மீது ஏலத்தின்போது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. குறிப்பாக, ஷாரூக்கானை 5.25 லட்சத்திற்கு பஞ்சாப் அணி எடுத்தது. இந்தநிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 13 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல இந்தாண்டு ஐபிஎலில் ஆர்.அஸ்வின், தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், விஜய்ஷங்கர், டி.நடராஜன், முருகன் அஸ்வின், ஜெகதீசன், சாய் கிஷோர், சந்தீப் வாரியர் ஆகியோருடன் ஷாருக்கான், ஹரிநிஷாந்த், எம்.சித்தார்த் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…